மாநிலங்களுக்குச் சேர வேண்டிய பங்கைத் தராமல் இழுத்தடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகப் போராடுவோம் என்று மேற்கு வங்க இடது முன்னணி அறிவித்திருக்கிறது.
பிப்ரவரி 10 அன்று மேற்கு வங்க மாநிலம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. கூட்டாட்சிக் கட்டமைப்புக்கு உட்பட்டு மாநிலங்களுக்குத் தர வேண்டிய பாக்கி மற்றும் பங்கை தரக்கோரி நடத்தப்படும் இந்தப் பிரச்சாரத்தில், அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியைப் பயன்படுத்துவதில் நடைபெறும் முறைகேடு களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கையும் கோரப்படும் என்று இடதுமுன்னணி தெரிவித் துள்ளது.
தேர்வுக்கு இடைஞ்சல் இல்லை
தற்போது +2 மாணவர்களுக்குத் தேர்வு நடந்து வருவதால், கைஒலிபெருக்கியை பயன் படுத்துவதில்லை என்றும், தங்கள் பிரச்சார நிகழ்வுகள் எதுவும் தேர்வு மையங்களுக்கு அரு கில் இருக்காது என்றும் கூறியுள்ளனர். மாண வர்களுக்கும், தேர்வு நடத்துவதற்கும் எந்தவித இடையூறும் இருக்கக்கூடாது என்பதற்காகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேற்குவங்க முதல்வராக ஜோதிபாசு இருந்த காலத்தில் இருந்து ஒன்றிய-மாநில அரசுகளு க்கிடையிலான உறவுகளுக்குத் தொடர்ந்து போராடும் பாரம்பரியம் கொண்டது இடது முன்னணி என்று குறிப்பிட்டதோடு, “அதே வேளையில் 100 நாள் வேலைத்திட்டம், அவாஸ் யோஜ்னா போன்ற திட்டங்களில் நடைபெறும் ஊழல்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அவசிய மாகும்; ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் இல்லாமல், ஒன்றிய மற்றும் மேற்குவங்க மாநில அரசுகள் மக்களை ஏமாற்றி, அவர்களுக்குச் சேர வேண்டியதைப் பறித்துக் கொண்டிருக்கின்றன” என்றும் இடதுமுன்னணி கூறியிருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளாகும் மதச்சார்பின்மை
மதச்சார்பின்மை தாக்குதலுக்கு உள்ளாகி வருவது குறித்து இடது முன்னணி கவலை தெரி வித்துள்ளது. “ராமர் கோவில் தொடக்க விழா மற்றும் ஞானவாபி மசூதி குறித்த வாரணாசி நீதி மன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றைச் சுற்றி, தங்கள் மதச்சார்பின்மைக்கு எதிராக நிகழ்ச்சி நிரலைப் பின்னியுள்ள விஸ்வ இந்து பரிசத், பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகள் மக்களின் ஒற்றுமை, கூட்டுப் பொறுப்பு மற்றும் நல்லிணக்கம் ஆகிய வற்றை அழிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ்.சின் தூண்டுதலின் பேரில் அரசியலை மதத்துடன் கலக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. இந்த சூழலில் தொடர் பிரச்சார நிகழ்வுகள் மூலமாக வெவ்வேறு இனங்கள், மொழிகள் மற்றும் மதங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியிலான ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் பலப்படுத்தும் பணியில் இடதுசாரிகள் இறங்க வேண்டும். பாஜக மற்றும் திரிணாமுல் ஆகியவற்றிற்கு எதிரான சக்திகளை ஒன்றுபடுத்தும் முன்முயற்சிகளை எடுக்கவேண்டும்.
மலையளவு ஊழல்
வங்கத்தில் திரிணாமுல் ஆட்சியின் ஊழல் மலைபோலக் குவிந்துள்ளது. கல்வித்துறையில் பணியிடங்களை நிரப்புதல், நியாய விலைக்கடை களில் பொருட்களை வழங்குவது மற்றும் ஒன்றிய அரசின் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள பெரும் ஊழல் தொழிலாளர்களின், விவசாயிகளின் மற்றும் பொது மக்களின் நலன்களுக்கு எதிரானதாக அமைந்திருக்கிறது” என்றும் இடதுமுன்னணி கூறியுள்ளது.